தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தண்டையார்பேட்டை போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை; போலீசார் விசாரணை

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவக்குமார் (52). இவர் தண்டையார்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தெரேசா என்ற மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். சிவகுமார், தற்போது முதலமைச்சர் இல்ல பாதுகாப்பு பணியில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு பணிக்கு செல்ல இருந்துள்ளார். குடும்பத்தினர் மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். மாலையில் வீட்டிற்கு வந்தபோது, உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது. குடும்பத்தினர், வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. அதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அறையில் சிவகுமார், மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

Advertisement

உடனே வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குடும்ப பிரச்னை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement