சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி உயிரிழப்பு!!
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி குப்பை லாரி மோதி 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை கைலாசம் நகர் பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், இவரது மகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக 15 வயது சிறுமி ஒருவர் ஆக்ட்டிவா இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றுள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தின் முன் சிலிண்டர் வைத்து பின் பக்கம் 8 வயது சிறுமி காவியாவை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அப்போது கைலாசம் வீட்டுக்கு வரும்போது சிலிண்டர் ஆனது கீழே விழுந்துள்ளது.
அதனை பிடிப்பதற்காக வண்டியை சிறுமி நிறுத்தி உள்ளார். நிறுத்திய வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழும்போது பின்னாலிருந்து வந்த குப்பை லாரி பின்சக்கரம் காவிய முகத்தில் ஏறி இறங்கியது. இதில் காவிய சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அருகில் இருந்த மக்கள் ஓடிவந்து குப்பை லாரி ஓட்டுனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார் ஓட்டுனரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 8 வயது சிறுமியானது குப்பை லாரியில் அடிபட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.