சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட சீதாராம் நகர் மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் முல்லை நகர் மயான பூமியினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 04.06.2025 முதல் 24.06.2025 வரை மேற்கண்ட மயானபூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் அருகிலுள்ள முல்லை நகர் தகன எரிவாயு மேடையினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.