தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசா தான் இப்போதும் வசூலிக்கிறீர்களா? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து தற்போது வரை ஒரு லிட்டருக்கு ஒரு பைசா தான் வசூலிக்கிறீர்களா என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதிலில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பல நிறுவனங்கள், நீர் வரி பாக்கியை தராமல் சுமார் ரூ.250 கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement

தனியார் சிமென்ட் ஆலை மற்றும் சில நிறுவனங்கள் நீர் வரி பாக்கியை செலுத்தாமல் தொடர்ந்து நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றன. இதனால் அரசுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் நிறுவனங்களிடம் வசூலிக்க வேண்டிய ரூ.250 கோடிக்கும் அதிகமான நீர் வரி பாக்கியை வசூலித்து, அந்த நிதியை ஆற்றின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக்கு பயன்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். பொதுப்பணித்துறை தரப்பில், ‘‘அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒரு பைசா என்ற கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆனால், அவர்களிடம் ஒரு லிட்டருக்கு ஒரு பைசா தான் இன்றும் வசூலிக்கிறீர்களா? எத்தனை நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கின்றன? ஒரு நாளைக்கு எவ்வளவு அளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது? இதுவரை எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளது? இதற்காக நிர்ணயித்த தொகை எவ்வளவு என்பது குறித்து நெல்லை கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

Advertisement

Related News