தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டில் வைத்து தாலி கட்ட ஏற்பாடு 18 வயது மருமகனை திருமணம் செய்ய முயன்ற 40 வயது மாமியார்: தடுக்க முயன்ற மகளுக்கு அடி, உதை

திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவனும், 15 வயது சிறுமியும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். சிறுமியின் தந்தை உயிரிழந்ததால், 40 வயதுள்ள அவரது தாயுடன் தம்பதிகள் வசித்து வந்தனர். இதற்கிடையில் மருமகனுக்கும், மாமியாருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியது.

Advertisement

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​அவரது தாயும், கணவரும் திருமணம் செய்து கொள்ள முயன்றார்களாம். கணவர் தனது தாயின் கழுத்தில் தாலி கட்டுவதை பார்த்த சிறுமி அதிர்ச்சியடைந்து தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாயும், அவரது கணவர் இருவரும் சேர்ந்து சிறுமியை சரமாரியாக தாக்கி, உதைத்தனர்.

அப்போது தாய் தலையில் பலமாக அடித்ததால் சிறுமி வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர செயலால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாமியார் மற்றும் மருமகனை தாக்கி இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement