தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தளி பெரிய ஏரியில் உபரி நீர் செல்லும் பகுதியில் புதர்களை அகற்ற நடவடிக்கை

*விவசாயிகள் கோரிக்கை

Advertisement

தேன்கனிக்கோட்டை : தளி பெரிய ஏரியில், உபரி நீர் செல்லும் பகுதியில் புதர்களை அகற்றி, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதி மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதியில் பெய்து வரும் மழையால், தளி பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

உபரி நீர் செல்லும் பகுதியில் முட்புதர்கள் முளைத்து காணப்படுகிறது. மேலும், ஆகாயதாமரை படர்ந்துள்ளதால் நீர்வழிப்பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உபரி நீர் செல்லும் பாதையை தூர்வாரி, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி கூறுகையில், ‘இந்த ஏரியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. பலமுறை மனு கொடுத்தும் உபரி நீர் செல்லும் பாதையில் உள்ள முட்புதர்கள், ஆகாய தாமரைகளை அகற்றவில்லை.

தற்போது ஏரி முழு கொள்ளளவு எட்டி, உபரி நீர் செல்லும் நிலை உள்ளது. மேலும் மதகு வழியிலிருந்து செல்லும் கால்வாய் தூர்வாராமல் உள்ளது. அதை தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

Advertisement