தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெள்ளோட்டத்துக்கு தைப்பூசத் தேர் தயார்

பழநி: பழநி தைப்பூசத் தேரின், சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து வெள்ளோட்டம் விடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலானது, தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது. இக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் விழாவிற்கு வள்ளி - தெய்வானை சமேததராக முத்துக்குமாரசுவாமி தேரில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும் வைகாசி விசாகம் உள்ளிட்ட விழாக்களிலும் தேரோட்டம் நடைபெறும். இத்தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த தேர் பழுதடைந்ததை அடுத்து, கடந்த 2 வருடங்களாக புதிய தேர் தயார் செய்யும் பணி, 46 லட்சம் ரூபாய் செலவில் நடந்து வந்தது. இத்தேர் கடவுள் சிற்பங்கள், யாழி சிற்பங்கள் உட்பட பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளுடன் இலுப்ப மரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை உருவாக்கும் பணியில், சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சேர்ந்த தேர் ஸ்தபதி பாலசுப்பிரமணி தலைமையிலான தேர் சிற்பிகள் ஈடுபட்டு வந்தனர். இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, சில நாட்களில் வெள்ளோட்டம் விடப்பட்டு, தைப்பூசத்தன்று புதியதாக தயார் செய்யப்பட்ட தேரில் சுவாமி உலா வரும் நிகழ்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related News