தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது!

சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் விமானம் மூலமாக பல்வேறு கடத்தல் நடைபெறுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏர் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.

Advertisement

இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் இருந்த தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது பயணிகள் வருகையை சுங்கத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்த போது 2 விமானங்களில் வந்த 2 பயணிகள், சுற்றுலா பயணிகள் விசாவில் தாய்லாந்து சென்று வந்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் பயணிகள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களின் உடமைகளை பரிசோதனை செய்ததில் சாக்லேட்டுகள் வடிவத்திலும், உணவு பாக்கெட்டுகளிலும் மறைத்து கொண்டுவந்த உயர்ரக கஞ்சா கண்டறியப்பட்டது. இதையடுத்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கஞ்சா கடத்தி வந்த 2 பயணிகளையும், வாங்க வந்த 3 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Advertisement

Related News