தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை பாலத்தின் எக்கு கட்டமைப்பு பணிகள் ஐதராபாத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 3.20 கி.மீ. நீளத்திற்கு ரூ.621 கோடியில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.  இதற்காக கடந்த 23ம் தேதி குஜராத் மாநிலம், வதோதராவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆந்திர மாநிலம், ஐதராபாத் குளோபல் தொழிற்சாலையில் 3,400 டன் எடைகொண்ட முன்வார்க்கப்பட்ட கட்டமைப்புகளின் பற்றவைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்து, இப்பணிகள் அனைத்தும் தரத்திற்கு ஏற்ப தயார் செய்யப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘‘மேம்பாலத் தூண்கள், மேல்தாங்கிகள், உத்திரங்கள் போன்ற முக்கியமான கட்டமைப்புகள் அனைத்தும் முன்வார்க்கப்பட்ட எக்கில் தயாரிக்கப்படுகின்றன என்பதே இந்த கட்டுமானப் பணியின் தனிச் சிறப்பாகும். சுமார் 15,000 டன் எடையுள்ள இக்கட்டமைப்புகள் குஜராத் மாநிலம், வதோதரா, ஆந்திர மாநிலம், ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் விரைவாக உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்படுகின்றன.

இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன், அண்ணாசாலைப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் குறையும், தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையேயான பயண நேரம் கணிசமாக குறையும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வசதிகள் ஏற்படும்’’ என்றார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் செயலாளர் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் சரவணசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News