தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

4வது டெஸ்ட் போட்டி தோல்வியை தவிர்க்குமா இந்தியா? இங்கிலாந்து 311 ரன் முன்னிலை

மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 669 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து ஆடிய இந்தியா 2வது இன்னிங்சில் 63 ஓவரின் போது 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.  இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கடந்த 23ம் தேதி, மான்செஸ்டரில் துவங்கிய 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி, 358 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
Advertisement

பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் எடுத்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 77 ரன், டாவ்சன் 21 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று, 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் லியாம் டாவ்சன் 26 ரன்னில் அவுட்டானார். அதன் பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோக்ஸ், 198 பந்துகளில், 3 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 141 ரன் குவித்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.

சிறிது நேரத்தில் பிரைடன் கார்ஸ் (47 ரன்) அவுட்டாக, 669 ரன்னுடன் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.  அதனால், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன் முன்னிலை பெற்றது. இந்தியா தரப்பில், ஜடேஜா 4, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா தலா 2, அன்சுல் கம்போஜ், முகம்மது சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர், 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பின் வந்த சாய் சுதர்சனும் ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதையடுத்து, மற்றொரு துவக்க வீரர் கே.எல்.ராகுலுடன் இணை சேர்ந்து கேப்டன் சுப்மன் கில் ஆடத் துவங்கினார். அவர்கள் இருவரும் நிதானமாகவும், பொறுப்பாகவும் ஆடி ரன்களை சேர்த்தனர். 63ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.ராகுல் 87 ரன்னுடனும்,சுப்மன் கில் 78 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

Advertisement

Related News