தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

4வது டெஸ்டில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: இங்கி. மாஜி சுழல் மான்டிபனேசர் சொல்கிறார்

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்கு முதல் முறையாக அழைக்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப்பிற்கு பதிலாக, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை அளித்துள்ளது. இந்நிலையில், நான்காவது டெஸ்டில் அர்ஷ்தீப் சிங்கை கண்டிப்பாக களமிறக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
Advertisement

இதுகுறித்து அவர் கூறுகையில், ``அர்ஷ்தீப் சிங் இந்த தொடரில் விளையாட வேண்டும். தொடரின் முதல் டெஸ்டில் அவர் விளையாடாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர், அவர் இந்திய அணிக்கு ஒரு நல்ல தேர்வாக இருந்திருப்பார். இந்த இங்கிலாந்து சூழல்களில் அவர் சிறப்பாக செயல்படுவார். மேலும், அடுத்து நடைபெற உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் அர்ஷ்தீப் சிங்குடன், ஜஸ்பிரித் பும்ராவையும் பிளேயிங் லெவனில் பார்க்க விரும்புகிறேன்.

ஏனெனில் அடுத்த போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான `வாழ்வா சாவா’ ஆட்டம், இதில் ஜஸ்பிரித் பும்ரா நிச்சயம் விளையாட வேண்டும். மான்செஸ்டர் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், அங்கு வேகமும், பவுன்சும் இருக்கும்” என்றார்.

Advertisement

Related News