தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் மறுபக்கத்தில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ தீவிரவாதிகள் காத்திருக்கிறார்கள்: உளவுத்துறை தகவல்

Advertisement

 

 

நகர், அக்.9: ஜம்மு காஷ்மீர் எல்லையில் நவீன கண்காணிப்பு சாதனங்கள் பயன்படுத்துவதால் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளின் ஊடுருவல் வெற்றிபெறவில்லை என்று மூத்த எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் நகரில் காஷ்மீர் எல்லைப்பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி அசோக் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் விழிப்புணர்வு மற்றும் நவீன கண்காணிப்பு சாதனங்களை பயன்படுத்துவது, எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ராணுவத்தின் ஆதிக்கம் செலுத்தியவிதம் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பதை உறுதி செய்துள்ளன.

 

குளிர்காலத்துக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்வார்கள். எல்லைக்கட்டுப்பாடு கோட்டுக்கு மறுபக்கத்தில் ஏவுதளங்களில் தீவிரவாதிகள் காத்திருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளது. ஏவுதளங்களில் உள்ள அனைத்து தீவிரவாதிகளும் வெளிநாட்டினர். அங்கு காத்திருக்கும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். எனினும் உளவுத்துறை உள்ளீடுகள் மற்றும் பகுப்பாய்வுகளின்படி எந்த நேரத்திலும் சுமார் 100 முதல் 120 தீவிரவாதிகள் இருக்கலாம்” என்றார்.

 

 

Advertisement

Related News