தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீரில் பயங்கரம் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

 

Advertisement

குப்வாரா: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கேரான் செக்டார் பகுதியில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர். இந்த கூட்டு நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் பிம்பிள்’ எனப் பெயரிடப்பட்டது. நேற்று (நவ. 7) தொடங்கிய இந்த தேடுதல் வேட்டையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை கண்டறிந்த வீரர்கள், அவர்களை நோக்கி முன்னேறினர். இன்று (நவ. 8) காலை, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த இந்த கடும் துப்பாக்கிச் சண்டையின் முடிவில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதி மிகவும் கரடுமுரடான மற்றும் தொலைதூரப் பகுதி என்பதால், வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக தேடுதல் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Related News