தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும்: ராஜேந்திரபாலாஜி பேச்சால் பரபரப்பு

ராஜபாளையம்: தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியான காங்கிரஸை கலைக்க வேண்டுமென ராஜேந்திரபாலாஜி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், அதிமுக சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: பீகார் தேர்தலில் என்டிஏ கூட்டணி மிகப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

Advertisement

எனவே காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டை பற்றிய கவலை இல்லை. காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை. ஊருக்கும் தேவையில்லை. தற்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டி கொடுக்கும் கட்சி. அந்த கட்சியானது தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது.

தமிழகத்தில் 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமர்வார்.  வருகிற சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் அதிமுகதான் போட்டியிடும். ஒலிம்பிக் ஜோதியை பிடித்து ஓடுகின்ற எடப்பாடி பழனிசாமிக்கு நாம் பக்க பலமாக இருக்க வேண்டும். அதிமுக - பாஜ கூட்டணி வலுவான கூட்டணி. இவ்வாறு கூறினார்.

Advertisement