தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜக நடிகர் வீட்டில் பயங்கரம்; ‘என் பிணம்தான் இங்கிருந்து போகும்’: சமரசம் பேச போன மனைவி கதறல்

Advertisement

லக்னோ: உத்தரபிரதேசத்தில் விவாகரத்து வழக்கில் சமரசம் பேசச் சென்ற மனைவி மீது கணவரே போலீசில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களை சேர்ந்த போஜ்புரி நடிகரும், பாஜக நிர்வாகியுமான பவன் சிங்கிற்கும், அவரது மனைவி ஜோதி சிங்கிற்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு முதல் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. குடும்ப வன்கொடுமை, கட்டாய கருக்கலைப்பு, திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் என பவன் சிங் மீது ஜோதி சிங் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது இருவரும் சமரசம் ஆனது போலக் காணப்பட்டாலும், தேர்தல் முடிந்ததும் உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. தன்னை அரசியல் ஆதாயத்திற்காக பவன் சிங் பயன்படுத்திக் கொண்டதாக ஜோதி சிங் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், லக்னோவில் உள்ள பவன் சிங்கின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு நேற்று ஜோதி சிங் சென்றுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேர சந்திப்பிற்குப் பிறகு பவன் சிங் வெளியேறியதும், அவரது சகோதரர் ஜோதி சிங்கை வெளியேறுமாறு கூறியுள்ளார். இதற்கிடையே, பவன் சிங் தனது பாதுகாப்பு கருதி அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், ஜோதி சிங்கை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர்.

அப்போது, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜோதி சிங், ‘நான் என்ன குற்றம் செய்தேன்?’ எனக் கதறி அழுதார். மேலும், வீட்டின் உள்ளே சென்ற அவர், ‘இங்கிருந்து என் பிணம்தான் வெளியே போகும். காவல் நிலையத்திற்கு வரமாட்டேன்’ என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். கணவர் வீட்டுக்கு வந்த தன் மீதே அவர் (பவன் சிங்) காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவங்கள் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவாகரத்து வழக்கில் சமரசம் பேசுவதற்காக ஜோதி சிங் சென்றதாகவும், அப்ேபாது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Related News