தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அம்மாபட்டியில் வேண்டுராயபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 15 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். சிவகாசி பகுதியில் நேற்று காலை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதில் பட்டாசு ஆலையின் வெடிமருந்து அறையில் எஞ்சியிருந்த ரசாயன கலவை நீர்த்து வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் ஆலையின் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. இதனால், சுமார் 10 கிமீ சுற்றளவு கிராமங்களில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். நேற்று விடுமுறை என்பதால் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு துறையினர் சென்று தீயை கட்டுப்படுத்தினர்.