தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊரப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே துணி குடோனில் நள்ளிரவில் பயங்கர தீ

கூடுவாஞ்சேரி,: ஊரப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே துணி குடோனில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. இதனையொட்டி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் துணி குடோன் வைத்துள்ளார். நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் துணி குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கூடுவாஞ்சேரி போலீசாருக்கும், மறைமலைநகரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

Advertisement

அதன்படி மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். தீ கொழுந்துவிட்டு எைுந்ததால் மகேந்திரா சிட்டி மற்றும் சிறுசேரி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். விடிய விடிய போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது நாச வேலையா? என சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான துணி மற்றும் கைவினை பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

Advertisement

Related News