தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்காசி அருகே அகழாய்வுப்பணி 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, ஈட்டி கண்டெடுப்பு: அகழாய்வு பணி துணை இயக்குநர் தகவல்

சிவகிரி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரம் அடுத்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் குலசேகரப்பேரி கண்மாய் பகுதியில் சாலை அமைப்பதற்காக 4 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அங்கு தொல்லியல் எச்சங்கள் காணப்பட்டன. இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடந்த 2024 முதல் இப்பகுதியில் அகழாய்வு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement

அகழாய்வு இயக்குனர் வசந்தகுமார், துணை இயக்குனர் காளியப்பன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தொடர்ந்து முகாமிட்டு தொல்லியல் அகழாய்வு பணி மேற்கொண்டு வந்தனர். இதில் திருமலாபுரத்தில் இருந்து சுமார் 10 கிமீ தூரத்தில் 35 ஏக்கர் பரப்பளவில் இரும்பு கால இடுகாடு உள்ளது. இந்த அகழாய்வு தளத்தில் தமிழகத்தில் முதன்முறையாக மிகப்பெரிய அளவில் அரண்கள் கிடைத்துள்ளது. 13.50 மீட்டர் நீளம் மற்றும் 10.50 மீட்டர் அகலத்தால் ஆன 35 கற்பலகைகளால் ஆன அரணுக்குள் ஈமத்தாழிகள் இருந்ததும், அதன் மேல் 1.50 மீட்டர் உயரத்திற்கு கூழாங்கற்கள் நிரப்பப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அகழாய்வு பணி துணை இயக்குனர் காளீஸ்வரன் கூறுகையில், ‘ மிகவும் நீளமான 2.5 மீட்டர் நீளமுள்ள ஈட்டியும் கிடைத்துள்ளது. 3 தங்க வளையங்கள், பல்வேறு குறியீடுகளுடன் ஈமதாழிகளின், பல வடிவத்திலான மண் பொருட்கள், பாண்டங்கள், இரும்பினாலான பொருட்கள் என 250க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளதாக கருதப்படுகிறது’ என்றார்.

Advertisement

Related News