தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்காசியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்..!!

சென்னை: தென்காசியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 6 நபர்கள் பலியான செய்தி மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இவ்வாறு எதிர்பாராத முறையில் உயிரிழந்திருப்பது அந்த குடும்பங்களின் வாழ்வையே பெருந்துயரத்தில் தள்ளும் மிகக் கொடிய சம்பவமாகும். விலை மதிப்பில்லாத உயிர்கள் விபத்தில் பறிபோவது மனதை பதற செய்கிறது.

Advertisement

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவாக நலம்பெற விரும்புகிறேன். இந்த துயரச் சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். மக்களின் உயிர் பாதுகாப்பு உறுதியாகும் விதத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பது மிக அவசியமாகும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News