தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தற்கொலை முயற்சி

*போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு மீட்டனர்

Advertisement

தென்காசி : தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் பெண் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த ராஜ சரஸ்வதி (69) என்ற பெண் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். திடீரென ராஜ சரஸ்வதி பிளாஸ்டிக் கவரில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

இது குறித்து ராஜ சரஸ்வதியின் கணவர் முப்புடாதி கூறுகையில், ‘எங்களுக்கு சொந்தமான இடம் வேறு ஒருவர் பெயரில் பட்டா உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மண் அள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை’ என்றார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News