தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெண்டர் விடப்பட்டு 5 ஆண்டு 11 மாதங்கள் ஆகியும் தாம்பரம் ரயில் நிலையத்தை மறு சீரமைக்காத ரயில்வே: தென்மாவட்ட பயணிகள் வேதனை

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தை மறு சீரமைக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு 5 ஆண்டுகள் 11 மாதங்கள் ஆகியும் மேற்கொள்ளாமல் ரயில்வே நிர்வாகம் மறுத்து வருகிறது. தமிழகத்திற்கான ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஒவ்வொரு மாநிலமும் அதற்குரிய பங்கை பெறுகிறது, இதில் அரசியலுக்கு இடமில்லை என்றும் ரயில்வே துறை சொல்லி வருகிறது. ஆனால் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது என்பதை அடிக்கடி ரயில்வே நிர்வாகம் நிருபித்து வருகிறது.

Advertisement

அதில் ஒன்று தாம்பரம் நிலையத்தின் மறுசீரமைப்பு திட்டம்

தாம்பரம் ரயில் நிலையம் சென்னையின் 3வது பெரிய ரயில்வே முனையமாக உள்ளது. இருப்பினும், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லை. எழும்பூர் ரயில் நிலையம், கிண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில், தாம்பரம் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு பணிகளுக்காக 2020ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் எடுத்தது. ஆனால், தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தை மறு சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், பயணிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது. மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் ரயில்கள் வந்து நிற்கும் நடைமேடைகளில் மேற்கூரை இல்லை. எனவே, பயணிகள் ரயில்களுக்காக காத்திருக்கும்போது கொளுத்தும் வெயிலில் நிற்க வேண்டும் அல்லது மழையில் நனைய வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் பயணிகள் மழையில் நினைந்தவாறே ரயிலுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 7.5 கோடி பயணிகளுக்கு சேவை செய்து, 2023-24ல் ரூ.246.7 கோடி வருவாய் ஈட்டிய போதிலும் தாம்பரம் ரயில் நிலையத்தில் எல்இடி திரைகள், லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள், சாய்வு தளங்கள், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு கூடங்கள் மற்றும் 5- 10 நடைமேடைகளில் மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை செய்யப்படவில்லை. அடிக்கடி பழுதடையும் நடைமேம்பாலத்தில் உள்ள சிறிய எல்சிடி திரைகள்தான் பயணிகளின் தகவல்களுக்கு ஆதாரமாக உள்ளது.

குறிப்பாக, மறுசீரமைப்பு திட்டத்தில் ரயில்வே பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அது மந்தகதியிலேயே இருந்தது. மறுசீரமைப்பு திட்டம் 5 ஆண்டுகள் 11 மாதங்களுக்கும் மேலாக தேக்க நிலையில் உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ஆகஸ்ட் 2020ல் ரூ.43.46 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில், ரூ.8.38 லட்சம் (19.3%) மட்டுமே செலவிடப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து தாமதமாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து தொடர்ந்து விமர்சனம் எழுந்த நிலையில், ஜூலை 2024ல் தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிக்கான விரிவான திட்ட அறிக்கை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும், கட்டுமான அனுமதி அக்டோபரில் எதிர்பார்க்கப்படும் என்றும், ஜூன் 2025ல் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதாவது ரூ. 1,000 கோடி மதிப்பில், தாம்பரம் ரயில் நிலையத்தின் 6 நடைமேடைகளையும் இணைத்து, டெர்மினல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதில் ஓய்வறை, கழிவறை, உணவகம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்படும் எனவும், விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்னும் ஒரு பணிகள் கூட தொடங்கப்படாமல் உள்ளது. அதாவது, ரயில்வே நிர்வாகத்திடம் தெற்கு ரயில்வே சார்பில் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில்வே நிர்வாகம் இன்னும் அதற்கு ஒப்புதல் கொடுக்காமல் மறுத்து வருகிறது. இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நடந்ததும்... நடக்காததும்...

Advertisement

Related News