தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் காவலாளி கொலை வழக்கு மடப்புரம் கோயிலில் சிபிஐ விசாரணை

Advertisement

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28) போலீஸ் தாக்குதலில் பலியான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு கடந்த 12ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான அதிகாரிகள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் மதுரை வந்தனர். சிபிஐ அதிகாரிகள் குழுவினர் மதுரையில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்காவை சந்தித்து ஆலோசனை செய்தனர். பிறகு மதுரை ஆத்திகுளம் வண்டிப்பாதை மெயின் ரோட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் டிஎஸ்பி மோகித்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பின்னர் ஒரு குழுவினர், அஜித்குமார் கொலை வழக்கு குறித்து ஆவணங்களை ஐகோர்ட்டிற்கு சென்று பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் குழுவினர் டிஎஸ்பி மோகித்குமார் தலைமையில் மடப்புரம் கோயிலுக்கு வந்து, கார் பார்க்கிங் பகுதி, அஜித்குமாரை அடித்ததாக கூறப்பட்ட கோசாலை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். இன்று முதல், இந்த வழக்கில் தொடர்புடைய காவலர்கள், கோயில் ஊழியர்கள், அஜித்குமாரின் உறவினர்களிடம் விசாரிக்க உள்ளனர்.

Advertisement

Related News