தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை தருவதாக இளம் பெண்ணை வடபழனிக்கு அழைத்து சென்று கோயில் பூசாரி உல்லாசம்

Advertisement

பின் தொடர்ந்து வந்து நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து மனைவியிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கணவனால் பரபரப்பு

சென்னை: தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை தருவதாக இளம் பெண்ணை வடபழனிக்கு அழைத்து சென்று கோயில் பூசாரி உல்லாசமாக இருந்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து தனது மனைவியிடமே ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கணவனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ராணி(27)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான இவர் தற்போது கணவருடன் வசித்து வருகிறார். வழக்கமாக ராணி வீட்டின் அருகே உள்ள ஆதிபுரிஸ்வரர் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது இளம் பெண் ராணிக்கு, கோயில் பூசாரி அசோக் பாரதி(39) பழக்கமானார். இந்த பழக்கத்தால் தனது குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கணவர் தன்னிடம் நெருக்கமாக இருப்பதில்லை என்று கூறியுள்ளார். அதற்கு பூசாரி அசோக் பாரதி, உங்கள் வீட்டில் தீய சக்திகள் இருக்கிறது.

அதை விரட்ட வேண்டும். அப்போது தான் உனது கணவர் உன்னிடம் நெருக்கமாக இருப்பார் என்று கூறியுள்ளார். அதற்கு ராணி இதற்கு பரிகாரம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு கோயில் பூசாரி, தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை அணிந்தால் தீய சக்திகள் உன்னிடம் நெருங்காது என கூறியுள்ளார். உடனே இளம் பெண் எனக்கு தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கோயில் பூசாரி வடபழனி முருகன் கோயிலில் நான் கொடுக்கும் ருத்ராட்ச மாலையை முருகன் முன்பு படைத்து அதை நீ அணிந்தால் உன்னை தீய சக்தி அணுகாது என்று கூறியுள்ளார். அதன்படி கடந்த 6ம் தேதி இளம் பெண் ராணி மற்றும் கோயில் பூசாரி அசோக் பாரதி ஆகியோர் வடபழனி முருகன் கோயிலுக்கு சென்று ருத்ராட்ச மாலை வாங்கியுள்ளனர். பிறகு முருகன் முன்பு படைக்க கோயிலுக்கு சென்ற போது, கோயில் நடை மூடப்பட்டிருந்தது.

இதனால் பூசாரி கோயில் திறக்கும் போது வரலாம். அதுவரை எனது உறவினர் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு மீண்டும் கோயிலுக்கு வரலாம் என்று உறவினர் வீட்டிற்கு பூசாரி அழைத்து சென்றுள்ளார். கோயில் பூசாரி திட்டமிட்டு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் நோக்கில் வடபழனி பக்தவச்சலம் காலனியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது உறவினர்கள் வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் சாவியும் பூசாரி அசோக் பாரதியிடம் தான் இருந்தது. இருவரும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது இளம் பெண் ராணிக்கு பாலியல் உணர்வுகளை தூண்டி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே இளம் பெண் ராணியின் கணவன், அடிக்கடி கோயில் பூசாரியுடன் நெருக்கமாக பழகி வந்ததால் சந்தேகமடைந்து, ராணியை வீட்டில் இருந்து அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

பிறகு கோயில் பூசாரி உறவினர் வீட்டில் தனது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை கையும் களவுமாக பிடித்து மனைவி ராணியை அடித்துள்ளார். பிறகு மீண்டும் கோயில் பூசாரியுடன் உல்லாசமாக இருக்க கோரி வலியுறுத்தி அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அவரது மனைவி ராணி மற்றும் கோயில் பூசாரி ஆகியோரிடம் உங்கள் ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. மனைவியிடம் உனது பெற்றோரிடம் இந்த வீடியோவை காட்டி உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன். அப்படி வீடியோ காட்ட கூடாது என்றால் எனக்கு ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று தனது மனைவி ராணியிடமே மிரட்டியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத ராணி, கோயில் பூசாரியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

ஒரு கட்டத்தில் இளம் பெண் ராணி, தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று என்னை பாலியல் பலத்காரம் செய்துவிட்டதாக கோயில் பூசாரி அசோக் பாரதி மீதும், கோயில் பூசாரியுடன் உல்லாசமாக இருக்க வைத்து அதை செல்போனில் வீடியோ எடுத்து ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் கணவர் மீது சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் கல்யாணிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க இணை கமிஷனர் கல்யாண், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி மகளிர் போலீசார் புகார் அளித்த இளம் பெண்ணிடம் புகார் மனுக்கள் பெற்று தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக ருத்ராட்ச மாலை வாங்கி தருவதாக ஏமாற்றி பலாத்காரம் செய்த கோயில் பூசாரி அசோக் பாரதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளம் பெண்ணின் கணவரிடம் போலீசார் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement