கோயில்களுக்கு காணிக்கையாக வரும் தங்கத்தை உருக்கி வங்கியில் முதலீடு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
Advertisement
இதன்மூலம் கிடைக்கப்பெறும் வட்டித்தொகை ஆண்டிற்கு ரூ.4 கோடியே 31 லட்சம். மேலும் 10 திருக்கோயில்களின் சுமார் 156 கிலோ எடையுள்ள பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்கள் ஒன்றிய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளது. முதல்வர், திருக்கோயில்களின் வருவாயை பெருக்குவதற்காக இத்திட்டத்தை மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் செயல்படுத்துவதற்கு ஆணையிட்டதன் காரணமாக இன்று திருக்கோயில்களுக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.6 கோடி வருமானம் கிடைப்பதோடு, இந்த திட்டம் முழுமை பெறுகின்றபோது ரூ.25 கோடி ஆண்டிற்கு வட்டி தொகை மூலம் வருமானமாக கிடைக்கும்.
Advertisement