தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில்களுக்கு காணிக்கையாக வரும் தங்கத்தை உருக்கி வங்கியில் முதலீடு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திருவிடைமருதூர் கோவி.செழியன் (திமுக, அரசு தலைமை கொறடா): பக்தர்கள் தரும் காணிக்கை நகைகளை உருக்கி சேமிப்பு வைப்பு திட்டத்தில் வைத்து அரசு திட்டத்தை செயல்படுத்துகிறதா? அமைச்சர் சேகர்பாபு: கடந்த 10 ஆண்டுகளில் அந்த பணிகள் நிறுத்தப்பட்டதால் பல்வேறு திருக்கோயில்களில் பொன் இனங்கள் தேங்கி இருந்தது. மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்டதும் இதுவரை 5 திருக்கோயில்களின் பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்களை ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.191.65 கோடி மதிப்பீட்டிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement

இதன்மூலம் கிடைக்கப்பெறும் வட்டித்தொகை ஆண்டிற்கு ரூ.4 கோடியே 31 லட்சம். மேலும் 10 திருக்கோயில்களின் சுமார் 156 கிலோ எடையுள்ள பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்கள் ஒன்றிய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளது. முதல்வர், திருக்கோயில்களின் வருவாயை பெருக்குவதற்காக இத்திட்டத்தை மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் செயல்படுத்துவதற்கு ஆணையிட்டதன் காரணமாக இன்று திருக்கோயில்களுக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.6 கோடி வருமானம் கிடைப்பதோடு, இந்த திட்டம் முழுமை பெறுகின்றபோது ரூ.25 கோடி ஆண்டிற்கு வட்டி தொகை மூலம் வருமானமாக கிடைக்கும்.

Advertisement

Related News