தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் ஊழியர் மரணம் சிபிஐ விசாரணை துவக்கம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் ஊழியர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணையில் உயிரிழந்தார். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம், ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவபிரகாசம், எஸ்எஸ்ஐ சிவக்குமார், பாரா போலீஸ் இளையராஜா மற்றும் கோயில் ஊழியர்கள், கோயில் அருகே கடை வைத்துள்ள வியாபாரிகள், அஜித்குமாரிடம் விசாரணை செய்த தனிப்படை போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.
Advertisement

மேலும் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், அய்யனார், அஜித்தின் தாயார் மாலதி, தம்பி நவீன் குமார், சித்தி ரம்யா, திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்பட பலரிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை செய்தார். இதுதொடர்பான விசாரணை அறிக்கையை கடந்த 8ம் தேதி ஐகோர்ட் கிளையில் அவர் சமர்ப்பித்தார்.

இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. ஐகோர்ட் மதுரை கிளையும் இவ்வழக்கை ஜூலை 15ம் தேதியில் இருந்து சிபிஐ விசாரணை செய்து, ஆக.20ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பிஎன்எஸ் 103 பிரிவின் கீழ் கொலை வழக்காக சிபிஐ நேற்று வழக்கு பதிந்து விசாரணையை துவங்கியது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி மோகித் குமார் நியமிக்கப் பட்டுள்ளார். சிபிஐயிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு, பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்து நகை திருட்டு போனது உண்மையா? நிகிதாவுக்கு ஆதரவாக அழுத்தம் கொடுத்தவர்கள் யார்? ஊழியர் கொலையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் என தெரிகிறது.

Advertisement