தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் காவலாளி மரண வழக்கு பேக்கரி ஊழியர்களிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கை சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். ஜூன் 27ம் தேதி இரவு குற்றப்பிரிவு போலீசார், அஜித்குமாரை திருப்புவனம் நான்கு வழிச்சாலையில் உள்ள பேக்கரியில் வைத்து விசாரணை செய்துள்ளனர். இதையடுத்து கடந்த 19ம் தேதி, சிபிஐ அதிகாரிகள் இந்த பேக்கரிக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
Advertisement

இவ்வழக்கில் அஜித்குமார் சென்ற தனிப்படை வாகனத்தின் டிரைவரான போலீஸ்காரர் ராமச்சந்திரனிடம் நீண்ட நேரம் விசாரித்தனர். நேற்று முன்தினம் பேக்கரியில் உள்ள 4 சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள ஜூன் 27ம் தேதி காட்சிகளை சிபிஐ அதிகாரிகள் சேகரித்தனர். சிபிஐ குழுவினரில் இருவர் நேற்று மாலை மீண்டும் அந்த பேக்கரியில் விசாரணை நடத்தினர். அப்போது, பேக்கரி ஊழியர்களிடம், எவ்வளவு நேரம் போலீசார் பேக்கரியில் இருந்தனர்? அப்போது விசாரணை செய்தனரா, இல்லையா என கேட்டனர்.

Advertisement

Related News