தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தெலுங்குதேசம் ஆதரவை பெற காங்கிரஸ், பாஜக தீவிர முயற்சி!!

டெல்லி : ஆந்திராவில் 16 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ள தெலுங்குதேசம் ஆதரவை பெற காங்கிரஸ், பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. 543 தொகுதிகளை கொண்ட மக்களவையில் பாஜக தலைமையிலான கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் உள்ளடக்கிய இண்டியா கூட்டணி 234 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற சூழலில் பாஜக தனியாக 235 இடங்களிலும் காங்கிரஸ் மட்டும் 100 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால் எந்த கட்சியும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாததால் இதர கட்சிகளின் உதவியை நாடுகின்றன.
Advertisement

உதாரணமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணிதான். ஆனாலும் என்டிஏ கூட்டணியை உடைத்துக் கொண்டு ஜேடியூ, தெலுங்கு தேசம் கட்சிகள் இண்டியா கூட்டணியில் சேர வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி திடீரென போன் செய்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

மறுபுறம், கர்நாடக நுணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் சந்திர நாயுடுவை தொடர்புகொண்டு பேசியுள்ளார். இண்டியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடுவுக்கு சிவக்குமார் உறுதி அளித்துள்ளார். தெலுங்கு தேசம் இண்டியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இண்டியா கூட்டணியை ஆதரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement