தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குற்ற பதிவுகளை பகிர அனுமதி; டெலிகிராம் நிறுவன தலைவர் பாவெல் துரோவ் அதிரடி கைது

பாரிஸ்: பேஸ்புக், எக்ஸ்(ட்விட்டர்), இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யுடியூப், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்கள் வரிசையில் டெலிகிராம் என்ற செய்தி பரிமாற்ற செயலியும் மிகவும் பிரபலமானது. துபாயை தளமாக கொண்ட டெலிகிராம் செயலியை ரஷ்யாவில் பிறந்த பாவெல் துரோவ்(39) என்பவர் நிறுவினார். இதுகுறிப்பாக ரஷ்யா, உக்ரைன், சோவியத் யூனியன் குடியரசு நாடுகளில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement

இந்நிலையில் பாவெல் துரோவ் பிரான்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாலை அஜர்பைஜானில் இருந்து பிரான்சின் போர்கெட் விமான நிலையத்தில் தரையிறங்கிய பாவெல் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

“டெலிகிராம் செயலியில் தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்வது, பணமோசடி, போதைப்பொருள் கடத்தல், சிறார்களுடன் தொடர்புடைய பாலியல் சுரண்டல் தொடர்பான செய்திகளை பகிர அனுமதித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டார்” என பிரான்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Advertisement