தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலுங்கானா அமைச்சராக பதவியேற்றார் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன்

ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலுங்கானா அமைச்சராக பதவியேற்றார். தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றார். தெலங்கானா பேரவையில் தற்போது 119 பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் தற்போது 15 அமைச்சர்கள் உள்ளனர். மேலும், 3 அமைச்சர்களுக்கான பதவி காலியாக உள்ளது.

Advertisement

ஆனால் ஏற்கனவே உள்ள அமைச்சர்களில் முஸ்லிம் சிறுபான்மையினர் யாரும் இல்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலுங்கானா அமைச்சராக பதவியேற்றார். தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினராக ஏற்கனவே அசாருதீன் நியமிக்கப்பட்ட நிலையில் அமைச்சரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கட்சியின் தலைமைக்கும், மக்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அமைச்சராவதற்கும் ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவை இரண்டும் தனித்தனி விஷயங்கள், இவற்றைப் பிணைக்கக் கூடாது. எனக்கு வழங்கப்படும் எந்தப் பொறுப்பாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக நான் நேர்மையாக உழைப்பேன் என்று கூறினார்.

Advertisement

Related News