தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலங்கானாவில் காலியாகும் சந்திரசேகரராவ் கட்சி பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10வது எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தார்

திருமலை: தெலங்கானாவில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10வது எம்எல்ஏ அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அக்கட்சிக்கு 30 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ரேவந்த்ரெட்டி முதல்வராக பதவி ஏற்றார். மேலும் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலிலும் பிஆர்எஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
Advertisement

இந்நிலையில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் தாவி வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதங்களில் காங்கிரசுக்கு அணி தாவும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பதான்செருவு பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏவும், சந்திரசேகரராவுக்கு நெருக்கமானவருமாக இருந்த மகிபால் ரெட்டியும் திடீரென காங்கிரசில் இணைந்தார். பி.ஆர்.எஸ். கட்சியின் ஜஹீராபாத் எம்.பி. வேட்பாளராக இருந்து தோல்வியடைந்த காலி அனிலும் காங்கிரசில் இணைந்தார். இவர்கள் இருவரும் முதல்வர் ரேவந்த்ரெட்டி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். இதுவரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், 6 எம்.எல்.சிக்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் காங்கிரசுக்கு தாவியுள்ளனர். இதன்மூலம் சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 75 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement