தெலங்கானாவில் காலியாகும் சந்திரசேகரராவ் கட்சி பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10வது எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தார்
இந்நிலையில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் தாவி வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதங்களில் காங்கிரசுக்கு அணி தாவும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பதான்செருவு பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏவும், சந்திரசேகரராவுக்கு நெருக்கமானவருமாக இருந்த மகிபால் ரெட்டியும் திடீரென காங்கிரசில் இணைந்தார். பி.ஆர்.எஸ். கட்சியின் ஜஹீராபாத் எம்.பி. வேட்பாளராக இருந்து தோல்வியடைந்த காலி அனிலும் காங்கிரசில் இணைந்தார். இவர்கள் இருவரும் முதல்வர் ரேவந்த்ரெட்டி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். இதுவரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், 6 எம்.எல்.சிக்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் காங்கிரசுக்கு தாவியுள்ளனர். இதன்மூலம் சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 75 ஆக உயர்ந்துள்ளது.