தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலுங்கானா இன்ஜினியரை சுட்டு கொன்ற அமெரிக்க போலீஸ்.. என்ன நடந்தது?: திடுக்கிடும் தகவல்!!

வாஷிங்டன்: தெலுங்கானாவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் முகமது நிஜாமுதீன் அமெரிக்க போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். தெலுங்கனாா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஹஸ்னுதீன். இவரது மகன் பெயர் முகமது நிஜாமுதீன். இவருக்கு வயது 29. இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தங்கி சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவர் அமெரிக்காவில் எம்எஸ் படிப்பை முடித்தார். அதன்பிறகு அங்கேயே சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.

Advertisement

இந்நிலையில் தான் கடந்த 3ம் தேதி முகமது நிஜாமுதீனுக்கும், அவரது அறையில் தங்கியிருக்கும் நண்பருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே முகமது நிஜாமுதீன் கத்தியை எடுத்து தனது நண்பரை குத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்டா கிளாரா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். கத்தியை காட்டி போலீசாரையும் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் குண்டு காயமடைந்த முகமது நிஜாமுதீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

முகமது நிஜாமுதீன் இறப்பு பற்றி அறிந்த குடும்பத்தினர் கதறி உள்ளார். இதுபற்றி அவரது தந்தை முகமது ஹஸ்னுதீன் கூறுகையில், என் மகன் அமெரிக்க போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பதை அவனது நண்பன் மூலமாக தெரிந்து கொண்டேன். நேற்று காலையில் தான் இந்த சம்பவம் எனக்கு தெரியவந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என அவர் கூறினார்.

Advertisement

Related News