தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிரியர் தேர்வில் தேர்வான 2500 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடத்தி 2500 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. இதற்கிடையே பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு சேரவேண்டிய 2 சதவீத ஒதுக்கீடு வழங்காமல் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஆசிரியர் அல்லாத பணி இடங்களில் உள்ளவர்கள் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கான 2 சதவீத இடத்தை நிரப்பாமல், நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2500 பேரை பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யக்கூடாது என்று இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தேர்வின் மூலம் நேரடி பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்திரகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு மனுதாரகள்தரப்பில் மூத்த வழக்கறிஞர் தாட்சாயினி ரெட்டி ஆஜராகி, இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்துவிட்டு 2500 பேருக்கு நியமனம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். தமிழ்நாடு அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு சிறப்பு வழக்கறிஞர் மைத்ரேயி சந்துரு ஆகியோர் ஆஜராகி, பணி நியமன உத்தரவுகள் தயாராக உள்ளது. 2 சதவீத ஒதுக்கீட்டில் ஆசிரியர் அல்லாத தகுதியானவர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த ஒதுக்கீட்டில் காலி இடம் இல்லை என்று தெரிவித்தனர்.

இதைக்கேட்ட நீதிபதிகள், நேரடி நியமனங்களுக்கான 50 சதவீத இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு (2500) பேருக்கு உரிய இட ஒதுக்கீடு முறையை கடை பிடித்து அரசு பணி நியமன உத்தரவுகளை உடனே வழங்கலாம். இந்த நியமனத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான 2 சதவீதம் குறுக்கிட முடியாது. 2 சதவீத இடம் குறித்து இறுதி விசாரணையில் முடிவு செய்யப்படும் உத்தரவிட்டு இறுதி விசாரணைக்காக வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Advertisement