ஒன்றிய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
Advertisement
சென்னையில், வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை 10 மணி அளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமுமுக சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முடித்து ைவக்க இருக்கிறார்.
Advertisement