தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிரியர் சிறப்பு டெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, 2011ம் ஆண்டு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் டெட் தேர்வு கட்டாயம் என உத்தரவிடப்பட்டது. ஓய்வு பெற 5 வருடங்கள் உள்ளவர்களுக்கு மட்டும் தளர்வு உண்டு. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் அரசு ஆசிரியர்கள் பாதிப்பிற்கு உள்ளானார்கள். அவர்களுக்காக சிறப்பு டெட் தேர்வை 2026ம் ஆண்டு ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பரில் 3 சிறப்பு டெட் தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டது. பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு தாள் - I மற்றும் தாள் - II என நடைபெறும். பொதுவாக 1 முதல் 5ம் வகுப்பு வரை முதல் தாளும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 2ம் தாளும் என நடைபெறும்.

Advertisement

இந்நிலையில், சிறப்பு டெட் தேர்வில் முதல் தாள் - இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதற்கு நிகரான உள்ள பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. 2ம் தாள் - பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இதற்கு நிகரான பதவிகளில் இருப்பவர்களுக்கு நடத்தப்படுகிறது.

1.9.2025 தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்கள் சிறப்பு டெட் தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், வட்டார வளமைய பயிற்றுநர் மற்றும் இப்பதவிகளுக்கு நிகரான பதவிகளில் உள்ளவர்கள் எழுதலாம். தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் சிறப்பு டெட் தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாக நவம்பர் 20ம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள டிசம்பர் 21 முதல் 22 வரை அவகாசம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 1800 425 6753 என்ற எண்ணிலும், trbgrievances@tn.gov.in என்ற இ-மெயில் முகவரி மூலமும் அணுகலாம். முதல் தாள் 2026ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியும், 2ம் தாள் ஜனவரி 25ம் தேதியும் நடைபெற உள்ளது.

Advertisement

Related News