தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்டு பல நீண்டு வாழ்வீர் ஐயன்மீர்...நாங்கள் கேட்ட முதல் சங்கீதம் கரும்பலகையில் உங்கள் 'சாக்பீஸ்' சத்தம்: ஆசிரியர் தினத்திற்கு வைரமுத்து வாழ்த்து

சென்னை: நாங்கள் கேட்ட முதல் சங்கீதம் கரும்பலகையில் உங்கள் 'சாக்பீஸ்' சத்தம் என ஆசிரியர் தினத்திற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் குடியரசு துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் சிறந்த தத்துவ ஞானியுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பள்ளிகளிலும் ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளப் பக்கங்களில் தங்களது ஆசிரியர்களை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை மூலம் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
Advertisement

ஆசிரியப் பெருமக்காள்!

நெற்றி நிலம்பட

வணங்குகிறோம் உங்களை

எங்கள் சூரியோதயம்

உங்கள் வகுப்பில் நிகழ்ந்தது

உங்கள் சொற்களில்

இருள் உடைந்தது

எம்.ஜி.ஆரும் சிவாஜியும்

உச்சத்திலிருந்தபோது

நீங்களே எங்கள்

கதாநாயகர்கள்

நாங்கள் கேட்ட

முதல் சங்கீதம்

கரும்பலகையில் உங்கள்

'சாக்பீஸ்' சத்தம்

உங்களைக் கடக்கையில்

நெஞ்சு கடக்குமே

ஒரு மெல்லிய அச்சம்

அதுதான்

உங்கள் மதிப்பின் உச்சம்

தேர்வுத் தாளில்

எப்போதேனும் எழுதுவீர்களே

'நன்று' என்று

ஆகா!

ஒற்றைச் சொல்லில்

ஒருபுட்டி ரத்தம்

உங்கள் கிளையிற்

பழுத்த பழங்கள்

எங்கெங்கோ ஏற்றுமதியாகிப்போக

உங்கள் வேர்கள் மட்டும்

இங்கே...

ஆங்காங்கே...

ஓய்வுறுநாளில்

கல்விக் கூடத்தில் பதிந்த

உங்கள் கடைசிப் பார்வையும்

விடைபெறுநாளில்

உங்களை நாங்கள் பார்த்த

கண்ணீர்ப் பார்வையும்

வேறு வேறல்ல

ஆண்டு பல

நீண்டு வாழ்வீர்

ஐயன்மீர்.   இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News