தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு ஆசிரியர் சங்கங்களிடம் இன்று கருத்து கேட்பு

சென்னை: ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு குறித்து, ஆசிரியர் சங்கங்களுடன் இன்று கருத்து கேட்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2011ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்து தற்போது பணியாற்றிவரும் ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்தது. இந்நிலையில், அந்த தேர்வு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் அது திரும்பப் பெறப்பட்டது.

Advertisement

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அதில், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு எப்படி தகுதித் தேர்வு நடத்துவது, தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் எப்படி வைப்பது, உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டன. மேலும், கல்வியாளர்களிடம் கருத்து கேட்ட பிறகு தேர்வு நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து, அவர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கருத்து கேட்க இருக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement