தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 41,515 பேர் ஆப்சென்ட்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் நேற்று நடந்த தாள் 2க்கான தேர்வில் 3.31 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். 41 ஆயிரத்து 515 பேர் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு 2025 நடத்துவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடப்பட்டது.

Advertisement

இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 11ம் தேதி தொடங்கி நவம்பர் 8ம் தேதி வரை நடந்தது. மேற்கண்ட தகுதித் தேர்வுகளை பொருத்தவரையில் தாள் 1க்கான தேர்வு 15ம் தேதி என இரண்டு நாட்கள் நடந்தது. தாள் 1ல் பங்கேற்க 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 367 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

மேலும், தாள் 2க்கான தேர்வு 16ம் தேதியும் நடந்தது.

இந்த தேர்வில் பங்கேற்க 3 லட்சத்து 73 ஆ யிரத்து 438 பட்டதாரிகள் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்காக தமிழகத்தில் 1241 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், இரண்டு தேர்வுகளையும் கண்காணிக்க 32 அதிகாரிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நியமித்தது. தாள் 1 தேர்வில் சென்னையில் மட்டும் 6056 பேரும், இவர்களுக்காக 23 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

தாள்2க்கான தேர்வில் சென்னையில் மட்டும் 22 ஆயிரத்து 932 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, நேற்று நடந்த தாள் 2க்கான தேர்வில் பங்கேற்க 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், நேற்றைய தேர்வில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 923 பேர்(88.9சதவீதம்) மட்டுமே பங்கேற்றனர். 41 ஆயிரத்து 515 பேர் பங்கேற்கவில்லை.

Advertisement

Related News