தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

19 வயது ஆசிரியை மர்ம மரணத்தால் பதற்றம் அரியானாவில் இன்டர்நெட் சேவை முடக்கம்

சண்டிகர்: அரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மனிஷா(19) என்ற இளம்பெண் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 11ம் தேதி பள்ளியில் இருந்து வௌியேறிய மனிஷா, ஒரு நர்சிங் கல்லூரி சேர்க்கை பற்றி விசாரிக்க சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் 13ம் தேதி பிவானியில் உள்ள ஒரு வயல் பகுதியில் இருந்து மனிஷாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

Advertisement

19 வயது ஆசிரியையின் மர்ம மரணம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிவானி, சர்கி தாத்ரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மறியல் போராட்டங்கள் நடக்கிறது. மேலும் ஆசிரியை மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பிவானி, சர்கி தாத்ரி மாவட்டங்களில் இணைய சேவைகளுக்கு 48 மணி நேர தடை விதிக்கப்பட்டுள்ளது.

* கடிதம் கண்டெடுப்பு

மனிஷாவின் உடலுக்கருகே தற்கொலை குறித்து அவர் எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டதாக பிவானி காவல் கண்காணிப்பாளர் சுமித் குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களும், மனிஷா பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கியதற்கான ஆதாரங்கள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement