தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரி குறைப்புக்குப் பிறகு புதிய ஜிஎஸ்டி தொடர்பாக 3,000 புகார்கள் வந்துள்ளன: நுகர்வோர் விவகார துறை தகவல்

புதுடெல்லி: வரி குறைப்புக்குப் பிறகு புதிய ஜிஎஸ்டி தொடர்பாக நுகர்வோர் உதவி எண்ணுக்கு 3,000 புகார்கள் வந்திருப்பதாக நுகர்வோர் விவகார செயலாளர் நிதி கரே நேற்று தெரிவித்துள்ளார். குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் நாடு முழுவதும் கடந்த 22ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம், தினசரி பயன்பாட்டு பொருட்களின் விலை குறைந்து அதன் பலன்கள் நேரடியாக நுகர்வோருக்கு வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால், புதிய ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பே பல பொருட்களின் விலையை பெரு நிறுவனங்கள் உயர்த்தி விட்டதால், மக்களுக்கு எந்த பலனும் சென்றடையவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கிடையே, புதிய ஜிஎஸ்டி அமல்படுத்துதல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தேசிய நுகர்வோர் உதவி எண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. இந்த உதவி எண்ணுக்கு இதுவரை 3,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக நுகர்வோர் விவகார செயலாளர் நிதி கரே நேற்று தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் அளித்த பேட்டியில், ‘‘ஜிஎஸ்டி தொடர்பாக தினமும் எங்களுக்கு புகார்கள் வருகின்றன. இதுவரை சுமார் 3,000 புகார் வந்துள்ளது. நடவடிக்கைக்காக அவற்றை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திற்கு அனுப்பி உள்ளோம். குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் பலன்களை வழங்குவதை தவிர்ப்பதற்காக தவறான தள்ளுபடிகள் மூலம் நுகர்வோரை ஏமாற்றும் நிகழ்வுகளை நுகர்வோர் விவகார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணிக்கிறது. முறைகேடுகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு மற்றும் சாட்பாட் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. தவறான தள்ளுபடிகளால் நுகர்வோரை ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் அதை நாங்கள் நிச்சயமாக கவனிப்போம்’’ என்றார்.

Advertisement