தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாளை முதல் ஆதார் எண்ணை இணைத்தோருக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்: ரயில்வே தகவல்

சென்னை: ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் ஆதார் எண்ணை இணைத்தோர் மட்டுமே நாளை முதல் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் கவுன்டர்கள் மூலம் மட்டுமே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். ஆன்லைன் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர ரயில்வே புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போலி கணக்குகள் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவை தடுக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.

கவுன்டரில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் மூலம் ஓடிபி நடைமுறையை ஜூலை 15முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட் சில நிமிடங்களிலேயே விற்று தீர்வதை தடுக்கும் வகையில் ஆதார் எண் இணைப்பு கட்டாயம். சட்டவிரோத செயலி மூலம் ஏஜெண்டுகள் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 2.25 லட்சம் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

ரயில் முன்பதிவு பயணிகள் அட்டவணை தயாரிப்பதில் புதிய மாற்றம்

இதனிடையே ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே இறுதிப் பயணிகள் அட்டவணையைத் தயாரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. டிக்கெட் உறுதியாகாதவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது 4 மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு பயணிகளின் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. மேலும், நிமிடத்திற்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை உருவாக்கும் திறன் கொண்ட புதிய முன்பதிவு அமைப்பை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.