தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாடா டிரஸ்ட்டுக்குள் வெடித்த அதிகார மோதல்: நிறுவனத்தை பாதுகாக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்!

டெல்லி: டாடா குழுமத்திற்கு வெடித்துள்ள அதிகார மோதலை தொடர்ந்து நிறுவனத்தின் நிலை தன்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியமன இயக்குநர்களை நியமிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக டாடா டிரஸ்ட்டின் அரங்காவலர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறி உள்ளது. செப்.11ம் தேதி நடைபெற்ற டாடா டிரஸ்ட்டின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் டாடா டிரஸ்ட்டின் தலைவர் நோயல் டாடா மற்றும் துணைத் தலைவரும், அறங்காவலருமான வேணு சீனிவாசன் ஆகியோர் முன்னாள் பாதுகாப்பு செயலர் விஜய் சிங்கின் மறு நியமனத்தை முன்மொழிந்துள்ளனர்.

Advertisement

இதனை அறங்காவலர்களின் ஒருவரான மேஹாலி மிஸ்டரி உள்ளிட்ட 4 அறங்காவலர்கள் விஜய் சிங்கின் மறு நியமனத்தை எதிர்த்ததால் பிரச்சனை ஏற்பட்டது. அதில் மூவர் இணைந்து மெஹலி மிஸ்ட்ரியை நியமிக்க முன்மொழிந்த நிலையில், அதனை சீனிவாசன் நிராகரித்ததால் பதற்றம் பற்றி கொண்டது. இந்த சூழலில் டாடா குடும்ப விசுவாசியாக அறியப்படுவோர் விஜய் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், நோயல் டாடாவை பதவியில் இருந்து இறக்க மெஹலி மிஸ்ட்ரி தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்துடன் மெஹலி மிஸ்ட்ரிதொடர்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா, துணைத் தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தனர். அப்போது நிறுவனத்தின் நிலைத்தன்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த விவகாரம் டாடா சன்ஸ் நடவடிக்கைளை பாதிக்கும் வகையில் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், நிறுவனத்தின் நலனுக்கு எதிராக இருக்கும் அறங்காவலர்களை நீக்குவது உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி ஒன்றிய அரசு கேட்டுள்ளது. இப்படியான பரபரப்பான சூழலில் அறங்காவலர் குழு மீண்டும் கூட உள்ளது.

Advertisement