தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இனி ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்க முடியாது டாஸ்மாக் மதுக்கடைகளில் 12,000 பில்லிங் மெஷின்கள்: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு: மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 12 ஆயிரம் பில்லிங் மெஷின் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோட்டில் நேற்று வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி நேற்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 2,000 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குற்றம் சாட்டுவது சரியல்ல. எப்படி 2,000 பேரை சாட்சிகளாக சேர்க்க முடியும்?

Advertisement

அதேபோல அவர் தொடர்ந்து ரூ.5,600 கோடி டாஸ்மாக் மூலமாக மேலிடத்துக்கு செல்கிறது என குற்றம்சாட்டி வருகிறார். என்னிடம் முழு ஆதாரம் உள்ளது. ஒரு ரூபாய் கூட ஊழல் நடைபெறவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் தவறு செய்திருக்கலாம். அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது கூட டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதம் ரூ.2,000 ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதிலும் 541 ஊழியர்கள் மீது, அவர்கள் செய்த தவறின் காரணமாக ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் 12 ஆயிரம் பில்லிங் மெஷின்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இனி ஒரு ரூபாய் கூட கடைகளில் அதிகமாக வாங்க முடியாது. தற்போது டாஸ்மாக் கடை ஊழியர்களை கவுன்சிலிங் மூலமாக பணி இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்யப்பட்டு மீண்டும் ரூ.20 கொடுத்து அந்த பாட்டிலை திரும்ப பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு மது கடைகள் தனியாரிடம் உள்ளன. அங்கு கடைகளும் குறைவு. அதனால் அது சாத்தியப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ஏற்கனவே 500 மது கடைகள் மூடப்பட்டன. மேலும் பல கடைகளை மூடுமாறு கோரிக்கைகள் வருகின்றன. அதை பரிசீலிப்போம். உடனடியாக மூடுவது என்பது பல பிரச்னைகளை உருவாக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement