தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

 

Advertisement

டெல்லி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ED விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோர் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகி வாதிட்டனர். டாஸ்மாக் வழக்கை மாநில அரசு விசாரணை நடத்திவரும் நிலையில் அமலாக்கத்துறை தலையிடும் அதிகாரமில்லை என்றும் கூட்டாட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசுத்தரப்பு தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கை தமிழ்நாடு அரசு விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை ஏன் தலையிட்டது?, இது மாநில அரசின் கூட்டாட்சி உரிமைக்கு எதிரானது இல்லையா?, சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது?, அமலாக்கத்துறை மாநில வரம்பிற்குள் ஏன் தலையிடுகிறது? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அமலாக்கத்துறை விசாரணையின்போது, பெண்கள் உட்பட டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள் 40 மணி நேரம் சிறைபிடித்து வைக்கப்பட்டனர். அமலாக்கத்துறையின் இந்த செயல் சட்ட மீறல் இல்லையா?. அவர்களுடைய அலைபேசிகளை கைப்பற்றி தரவுகளை பதிவிறக்கம் செய்தது உரிமை மீறல் இல்லையா?

அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

Related News