தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாஸ்மாக் பார் ஊழியர்கள் மீது தாக்குதல் மைசூரில் பதுங்கிய பாஜ மாவட்ட செயலாளர் கைது

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே மேட்டுப்பாறையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை, அதனுடன் இணைந்த பார் செயல்படுகிறது. கடை மற்றும் பார் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜ செயலாளர் விஜயகுமார் (48) என்பவரது இடத்தில் உள்ளது. இந்த கடையை, திருப்பூரைச் சேர்ந்த அழகர்சாமிக்கு உள்வாடகைக்கு விஜயகுமார் விட்டுள்ளார். இதில், வாடகை பணம் தொடர்பாக விஜயகுமாருக்கும், அழகர்சாமிக்கும் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், கடந்த 13ம் தேதி (வியாழன்) காலை 10 மணி அளவில் பாஜ செயலாளர் விஜயகுமார், கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் அடியாட்களுடன் பாருக்கு சென்று அங்கு வேலை செய்தவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். இதில், திருப்பூர் குமார்நகர் கார்த்திக் (25), கருப்புசாமி (22), பெத்தசாமி (25), ஆனந்த் (20) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

புகாரின்பேரில் ஊதியூர் போலீசார் வழக்குப்பதிந்து, பங்காம்பாளையம் சுரேஷ் (25), திருப்பூர் மனோஜ்குமார் (27) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்தனர். அடியாட்களை அழைத்துச்சென்ற பாஜ மாவட்ட செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் விஜயகுமார், கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், விஜயகுமாரை கைது செய்து, காங்கயம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement