தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் 5,324 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1009 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு

*கலெக்டர் இளம்பகவத் தகவல்

Advertisement

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 5,324 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2025-26ம் ஆண்டில் ரூ.1009 கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இதுவரை ரூ.487.9 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்ப்புற பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள ஏழை மகளிரை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழு அமைத்தல், பயிற்சிகள் வழங்குதல், மக்கள் அமைப்புகளை உருவாக்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான கடன் பெற்று தருதல், வாழ்வாதார தொழில்களில் ஈடுபட வைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தகுதியான நபர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தைச் செயல்படுத்துதல் போன்ற பணிகளும் மகளிர் சுய உதவிக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக நகர்ப்புற பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் அமைத்தல் பயிற்சி வழங்குதல், நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலமாக சேவைகள் வழங்குதல் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் மற்றும் தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகளும் முனைப்புடன் நடந்து வருகின்றன.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் பெறுதல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் அரசின் மூலமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக எய்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2025-26ம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5,324 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1009 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.487.9 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தகுதியான குழுக்களை தரமதிப்பீடு செய்து வங்கிகள் மூலமாக கடன் பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Advertisement

Related News