தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தார் சாலை அமைக்க ஆட்சேபனை காரை ஏற்றி முதியவரை கொன்ற பேரூராட்சி தலைவர் கைது

திருப்பூர்: திருப்பூரில் தார் சாலை அமைக்க ஆட்சேபனை தெரிவித்த முதியவரை போதையில் காரை ஏற்றி கொலை செய்த பேரூராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், மங்கலம் அடுத்த சாமளாபுரம் கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (57). இவர், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்று டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சாமளாபுரம்-காரணம்பேட்டை சாலையில் வந்தபோது, அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று, பழனிசாமியின் டூவீலர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மீது மோதிய கார் நிற்காமல் சென்றது.

Advertisement

இதுகுறித்து மங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச்சென்றது சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிசாமி (60) என்பதும், போதையில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டார். தொடர் விசாரணையில் கருக்கம்பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் முறைகேடாக தார் சாலை அமைக்கப்படுவதாக பழனிசாமி மற்றும் அவரது நண்பர் அம்மாசியப்பன் ஆகியோர் பேரூராட்சி நிர்வாக பொறியாளரிடம் மனு அளித்தனர். அந்த ஆத்திரத்தில் டூவீலரில் சென்ற பழனிசாமியை, போதையில் பேரூராட்சி தலைவர் பழனிசாமி கார் ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிந்து பேரூராட்சி தலைவர் பழனிசாமியை நேற்று கைது செய்தனர்.

Advertisement