தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு அணியுடன் ரஞ்சி கிரிக்கெட்: விதர்பா 501 ரன் குவிப்பு; 210 ரன் முன்னிலை பெற்றது

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நேற்று, தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் விதர்பா அணி 501 ரன் குவித்து, 210 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. குரூப் ஏ பிரிவில் தமிழ்நாடு - விதர்பா அணிகள் இடையிலான 4 நாள் போட்டி கடந்த 1ம் தேதி துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின் முதல் இன்னிங்சை ஆடிய விதர்பா அணி, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 211 ரன் குவித்திருந்தது. துருவ் ஷோரி 80 ரவிகுமார் சமர்த் 24 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 3ம் நாளான நேற்று, முதல் இன்னிங்சை விதர்பா வீரர்கள் தொடர்ந்தனர்.

Advertisement

துருவ் ஷோரி மேலும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ரவிகுமார் சமர்த் 56 ரன்களுக்கு வீழ்ந்தார். பின் வந்த யாஷ் ரத்தோட் அற்புதமான ஆட்டத்தை அரங்கேற்றி 133 ரன் குவித்து பெவிலியன் திரும்பினார். அக்சய் வாத்கர் 43, பார்த் ரெகாடே 21 ரன்னில் அவுட்டாகினர். 148.4 ஓவரில் விதர்பா அணி, 501 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அதன் மூலம், அந்த அணி 210 ரன்கள் முன்னிலை பெற்றது. தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை பறித்தார். திரிலோக் நாக் 3, சந்திரசேகர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் 2வது இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது. அதனால், தமிழ்நாடு 204 ரன்கள் பின்தங்கி இருந்தது.

Advertisement

Related News