தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக வாலிபரை மீட்க கோரி வழக்கில் வெளியுறவுத்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்: நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை

சென்னை: கம்போடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாலிபரை மீட்கக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யாத ஒன்றிய வெளியுறவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி என்பவர், கம்போடியா நாட்டில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சட்ட உதவிகளை வழங்கி, இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் லதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க ஒன்றிய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கில் ஏற்கனவே 3 முறை அவகாசம் வழங்கியும் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளிக்காதது கண்டனத்திற்குரியது. நீதிபதி அல்லது அமைச்சரின் மகன் இதுபோல சிக்கியிருந்தால் இப்படி செயல்படுவீர்களா?. மகனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல், சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் பரிதவிக்கும் தாயை நினைத்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் முக்கியமானவர். பிரதமராக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி. இந்த விவகாரத்தை தீவிரமாக கருதி, ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் உரிய விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வெளியுறவுத் துறை செயலாளரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும்,’ என்று எச்சரித்து விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Advertisement