தமிழக வாக்காளர் பட்டியலில் வடமாநிலத்தவரை சேர்ப்பதா? பிரேமலதா கண்டனம்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, திருத்தணி முருகன் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் வாக்குரிமை பெறுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை, இருப்பினும் அவரவர் மாநிலங்களில் வாக்குரிமை பெற வேண்டும். தமிழ்நாட்டில் வேலை தேடி வரும் வடமாநில தொழிலாளர்களை, வாக்காளர் பட்டியல் சேர்ப்பது தவறான நடவடிக்கை. உடனடியாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.