தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பங்குச்சந்தையில் ரூ.335 கோடி மோசடி: முக்கிய குற்றவாளிகள் துபாய்க்கு தப்பியோட்டம்

Advertisement

புதுடெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பங்குச்சந்தையில் ரூ.335 கோடி மெகா மோசடி செய்த முக்கிய குற்றவாளிகள் துபாய்க்கு தப்பியோட்டம் பிடித்ததால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வந்த சர்வதேச சைபர் மோசடிக் கும்பல் ஒன்று, பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் மாதம் 7 முதல் 11 சதவீதம் வரை லாபம் தருவதாக ஆசை காட்டி, நாடு முழுவதும் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ‘ஐவி டிரேட்’, ‘ஸ்கை குரோத் வெல்த் மேனேஜ்மென்ட்’ போன்ற போலி நிறுவனங்களை உருவாக்கி, மல்டி-லெவல் மார்க்கெட்டிங் பாணியில் செயல்பட்டு வந்துள்ளனர்.

புதிய முதலீட்டாளர்களைச் சேர்ப்பவர்களுக்கு பிரான்ஸ், சில்வர், கோல்டு எனப் பதவிகள் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இந்த வலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த 11,000க்கும் மேற்பட்டோர் சிக்கி, சுமார் ரூ.335 கோடியை (ரூ.235 கோடி வங்கிப் பரிவர்த்தனை, ரூ.100 கோடி இதர பரிவர்த்தனை) இழந்துள்ளனர். இந்த மெகா மோசடி குறித்து புகார்கள் குவிந்த நிலையில், சூரத் நகர சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

சூரத் மற்றும் ராஜ்கோட் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி, டேனிஷ், ஜெய்சுக் படோலியா, யஷ் படோலியா ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 லட்சம் ரூபாய் ரொக்கம், ஏராளமான மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியின் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர்கள் துபாய்க்கு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க சர்வதேச அளவில் தேடுதல் வேட்டையை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.

Advertisement

Related News